Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா..?? – முதல்வர் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா..?? – முதல்வர் தீவிர ஆலோசனை!
, செவ்வாய், 4 ஜனவரி 2022 (10:53 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் தொற்றுகள் தீவிரமடைய தொடங்கியுள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10 வரை விடுமுறை நீடிக்கபட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, பள்ளி வகுப்புகளை முறைப்படுத்துவது, கடைகள் செயல்படும் நேரத்தை குறைத்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை!