ஆளுனரோடு விரோதம் இல்லை.. இதுதான் காரணம்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:29 IST)
ஆளுனர் நடத்திய தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ஆளுனர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டுள்ளதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்தன.

இந்நிலையில் இதுகுறித்து இன்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ”நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்முடிவு கிண்டி ஆளுனர் மாளிகையில் 210 நாட்களாக முடங்கி கிடக்கிறது. ஆளுனருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டை விட தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நன்மை, பலனே முக்கியமானது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காதது தமிழக மக்களை அவமதிக்கும் செயல்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments