Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சி முயற்சி - மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சி முயற்சி - மு.க.ஸ்டாலின் கண்டனம்!
, திங்கள், 11 மார்ச் 2019 (17:07 IST)
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில்  ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை காப்பாற்றிட ஆளுங்கட்சியே போராடுவதாக கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை காமுகர்கள் கூட்டம் ஒன்று கொடூரமான பாலியல் வன்முறைக்குட்படுத்தியிருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியும் அது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.
 
பொள்ளாச்சிப் பகுதியில் பொதுமக்களும், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போராட்டங்களை நடத்தியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்கால நலன் பாதுகாக்கப்படும் வகையில் விசாரணை நடைபெற வேண்டும் .
 
குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, தி.மு.க சட்டரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும் இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாதி ஓட்டுகளை கவர, அதிமுக பலே வியூகம்!!