Publish Date: Mon, 11 Mar 2019 (11:00 IST)
Updated Date: Mon, 11 Mar 2019 (11:05 IST)
பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சியில் கும்பல் ஒன்று இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் பொள்ளாச்சியில் 200 பெண்கள் 20 ஆண்களால் சீரழிக்கப்பட்டதை கேள்விபட்டு அதிர்ச்சியடைந்தேன். என்ன நடக்கிறது நாட்டில்? அவ்வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.