Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு

Sinoj
வெள்ளி, 12 ஜனவரி 2024 (18:53 IST)
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானப்படை விமானம் காணாமல் போன நிலையில்,  இந்த  விமானத்தின்  பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானப்படை விமானம் வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது திடீரென்று காணாமல் போனது.

இந்த விமானப் படை விமானத்தை நீண்ட நாட்கள் தேடப்பட்ட நிலையில்  இதுகுறித்த தகவல் தெரியாததால், 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், காணாமல் போன விமானத்தின்  பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், தேசிய கடல் தொழில்நுட்ப  நிறுவனம் மூலம் அனுப்பிய நீர்மூழ்கி வாகனம் பதிவு செய்த படங்களை  ஆய்வு செய்தனர்.

இதில், சென்னையில் இருந்து 310கிமீ தொலையில் கடலுக்கு அடியில் கிடக்கும் ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments