Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்ரா பௌர்ணமியில் குமரியில் நடக்கும் அதிசயம்! ஒரே நேரத்தில் மறையும் சூரியன், உதிக்கும் சந்திரன்!

Prasanth Karthick
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (08:38 IST)
இன்று சித்ரா பௌர்ணமி நாள் தமிழகம் முழுவதும் பல வகையில் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் குமரியில் நடக்க இருக்கும் அதிசயத்தை காண மக்கள் அங்கே குவிந்து வருகின்றனர்.



பொதுவாக கன்னியாக்குமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் நின்று சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் காண முடியும். இவ்வாறு கடலுக்கு மேல் சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையும் கன்னியாக்குமரியில் மட்டுமே காண முடியும். இதில் மற்றொரு சிறப்பு ஆண்டில் ஒருமுறை சூரிய அஸ்தனமாகும் அதேசமயம் சந்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் காண முடியும். இது சித்திரா பௌர்ணமி நாளில் நடைபெறுகிறது.

இன்று சித்திரா பௌர்ணமி என்பதால் இன்று ஒரே சமயத்தில் அரபிக்கடலில் சூரிய அஸ்தமனமும், வங்க கடலில் சந்திர உதயத்தையும் காண முடியும். இதனால் இந்த அரிய காட்சியை காண மக்களும், சுற்றுலா பயணிகளும் குமரிமுனைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments