சித்ரா பௌர்ணமியில் குமரியில் நடக்கும் அதிசயம்! ஒரே நேரத்தில் மறையும் சூரியன், உதிக்கும் சந்திரன்!

Prasanth Karthick
செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (08:38 IST)
இன்று சித்ரா பௌர்ணமி நாள் தமிழகம் முழுவதும் பல வகையில் சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் குமரியில் நடக்க இருக்கும் அதிசயத்தை காண மக்கள் அங்கே குவிந்து வருகின்றனர்.



பொதுவாக கன்னியாக்குமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் நின்று சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் காண முடியும். இவ்வாறு கடலுக்கு மேல் சூரிய உதயம், அஸ்தமனம் இரண்டையும் கன்னியாக்குமரியில் மட்டுமே காண முடியும். இதில் மற்றொரு சிறப்பு ஆண்டில் ஒருமுறை சூரிய அஸ்தனமாகும் அதேசமயம் சந்திர உதயத்தையும் ஒரே நேரத்தில் காண முடியும். இது சித்திரா பௌர்ணமி நாளில் நடைபெறுகிறது.

இன்று சித்திரா பௌர்ணமி என்பதால் இன்று ஒரே சமயத்தில் அரபிக்கடலில் சூரிய அஸ்தமனமும், வங்க கடலில் சந்திர உதயத்தையும் காண முடியும். இதனால் இந்த அரிய காட்சியை காண மக்களும், சுற்றுலா பயணிகளும் குமரிமுனைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெருங்கி வரும் டிட்வா புயல்.. சென்னை உள்பட பல பகுதிகளுக்கு சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கை..!

30 மணி நேரம் தொடர் மழை!.. தூத்துக்குடி, நெல்லையில் கடும் குளிர்!..

ராபிடோ ஓட்டுநர் கணக்கில் ரூ.331 கோடி பரிவர்த்தனை நடந்தது எப்படி: அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி உண்மை..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் திடீர் ஒத்திவைப்பு: சஸ்பென்ஸ் தரும் 'கண் திருஷ்டி' எமோஜி!

இஸ்லாமியர் வீட்டை இடித்த அரசு.. அவருக்கு வீடு கட்டி தருவேன் என இடம் கொடுத்த பக்கத்து வீட்டு இந்து மத நபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments