அரசு கல்லூரிகளை தொடர்ந்து தனியாரிலும் சேர்க்கை உயர்வு! – அமைச்சர் பொன்முடி தகவல்!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (10:48 IST)
நடப்பு கல்வி ஆண்டில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தனியார் கல்லூரிகளிலும் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கல்லூரிகல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் மாணவர்கள் கடந்த ஆண்டுகளை விட அதிகமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இடங்களை 20% அதிகரிக்க உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனியார் கல்லூரிகளிலும் மாணவர்கள் நலன் கருதி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக தனியார் கல்லூரிகளில் 10% இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்த அமைச்சர் பொன்முடி தற்போது 15% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments