Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமை செயலகம் அருகே மணல் திருட்டு; அரசு உறங்குகிறதா? – கமல்ஹாசன் கேள்வி!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (10:34 IST)
சென்னை கூவம் ஆற்றில் மணல் திருட்டு நடந்து வருவதை அரசு கவனிக்க தவறிவிட்டதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ”சென்னை தலைமை செயலகத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் கூவம் ஆற்றில் மணல் திருட்டு நடந்து வருகிறது. அவ்வளவு முக்கியமான போக்குவரத்து சாலையில், காவலர்கள் பணியில் இருக்கும்போதே இது நடைபெறுகிறது. குறைந்தபட்சமாக கணக்கிட்டால் கூட இதனால் ஆண்டிற்கு அரசுக்கு 11 கோடி இழப்பீடு ஏற்படும்” என கூறியுள்ளார்.

மேலும் இந்த மணல் வீடுகட்ட ஏற்றது அல்ல என்பதால் இதனால் கட்டப்படும் கட்டிடங்களின் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பியுள்ள கமல்ஹாசன் இப்படி மணல் தொடர்ந்து அள்ளப்படுவதால் கூவம் – கடற்கரையில் கடக்கும் பகுதியில் சுற்றுசூழல் பாதிப்புகள் உருவாகலாம் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments