Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொங்கல் பண்டிகையை ஒட்டி10,749 சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் சிவசங்கர்

buses
, செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:52 IST)
பொங்கல் பண்டிகையையொட்டி 10,000க்கும்அதிகமான பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
பொங்கல் தீபாவளி உள்ளிட்ட விசேஷ பண்டிகையின்போது சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் பொங்கல் திருநாள் கொண்டாட சென்னையிலிருந்து மற்ற மாவட்டத்திற்கு செல்லும் மக்களின் வசதியை கருத்தில் கொண்டு 10 ஆயிரத்து 749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் 12-ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை இயக்கப்படும் என்றும் அதன் பிறகு 17, 18 ஆம் தேதியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் இந்த சிறப்புப் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.18.50 கோடி அபராதம்: தென்கொரியா அரசு அதிரடி