Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொங்கல் பரிசு தொகையை வங்கிக்கணக்கில் செலுத்த இயலுமா? உயர்நீதிமன்றம் கேள்வி

pongal
, திங்கள், 2 ஜனவரி 2023 (18:43 IST)
பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாயை ரேஷன் அட்டைதாரர்கள் வங்கி கணக்கில் செலுத்த முடியுமா என தமிழக அரசு பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
இந்த ஆண்டு பொங்கல் பரிசு பணமாக ரூபாய் 1000 ரொக்கத்தொகை வழங்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இந்த பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்திருந்தார்
 
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் பொங்கல் பரிசு தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த இயலுமா என தமிழக அரசிடம் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞரும் காலம் குறைவாக இருப்பதாலும் சில வங்கிகள் மினிமம் தொகை இருப்பு இல்லை என பிடித்தம் செய்து கொள்வார்கள் என்றும் அதனால் அனைவருக்கும் உரிய பலன் கிடைக்காது என்றும் பதிலளித்தார்
 
அப்போது நீதிபதிகள் ஆதார் எண் - மின் இணைப்பு போல இதனையும் நடைமுறைப் படுத்தலாமே என கூறிய நிலையில் ஜனவரி 4ஆம் தேதி இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன்.. வீடு தேடி வரும் என தகவல்!