Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி வாரம் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

இனி வாரம் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (08:40 IST)
தமிழகத்தில் இனி வாரம் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க சமீப வாரங்களில், வாரத்திற்கு இருமுறை என தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த வாரத்திற்கு பிறகு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதுதவிர மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி மையம் செயல்பட்ட நிலையில் இனி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள்; இந்தியாவில் உயர்ந்த பெண்கள் எண்ணிக்கை!