ஜூன் 12 தண்ணீர் வராது – அமைச்சர் காமராஜ்

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (17:01 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுபடி கர்நாடகா வரும் ஜூன் 12 க்குள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் தற்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காமராஜ் தண்ணீர் திறக்கப்படாது என்று கூறியிருப்பது விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரிய பரிந்துரையின்படி ஜூன் 12க்குள் 92டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும். ஆனால் கர்நாடக அரசாங்கமோ தங்கள் தேவைக்கே தண்ணீர் போதவில்லை என்றும், மழை பொழிவு சரியாக இல்லாததால் தண்ணீர் நிரம்பவில்லை என்றும் சொல்லி கை விரித்துவிட்டன. இந்நிலையில் மேட்டூர் அணை இருப்பிலாவது தண்ணீர் வந்தால் விவசாயத்தை மேற்கொள்ளலாம் என விவசாயிகள் நம்பியிருந்தனர். தற்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “அணையில் நீர்வரத்து மிகவும் குறைவாக இருப்பதால் தண்ணீர் திறக்க போவதில்லை. ஆழ்துளை கிணறுகள் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும் குறுவை சாகுபடிகளை மேற்கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

இது விவசாயிகளிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments