Publish Date: Tue, 04 Jun 2019 (20:04 IST)
Updated Date: Tue, 04 Jun 2019 (20:06 IST)
இஸ்லாமியர்களின் புனித விழாவான ரம்ஜான் நாளை தமிழகமெங்கும் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்தார். இதனால் நாளை ரம்ஜானை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள்.
ரம்ஜான் விழாவானது வருடாவருடம் கொண்டாடப்பட்டாலும் பிறை தெரிவதற்கான காலங்களில் சில மாற்றங்கள் ஏற்படுவதால் முன்னும் பின்னும் சில நாட்கள் மாறுவது வழக்கம். இன்று பிறையை பார்த்து உறுதி செய்த தலைமை ஹாஜி நாளை ரம்ஜான் கொண்டாடுவதை உறுதி செய்துள்ளார்.