சென்னையில் இருந்து 190 கிமீ தூரத்தில் மிக்ஜாம் புயல்… 9 கிமீ வேகத்தில் நகர்வு!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2023 (07:28 IST)
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. இதனால் சென்னை முழுவதும் வெள்ள நீரில் மூழ்கி இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் மெதுவாக நகர்ந்து இப்போது ஆந்திராவின் நெல்லூருக்கு தென் கிழக்கே 30 கிமீ தொலைவிலும், பாபட்லாவில் இருந்து தெற்கே 130 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக இந்த புயல் மணிக்கு 9 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

மிக்ஜாம் புயல் இப்போது கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்று முற்பகல் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 110 கி மீ வரை காற்று வேகமாக வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

மதுரை, கோவைக்கு மெட்ரோ கிடையாது.. திட்டத்தை நிராகரித்த மத்திய அரசு..!

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments