Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லூர் அருகே கரையைக் கடக்க தொடங்கிய மிக்ஜாம் புயல்!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2023 (07:15 IST)
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வரலாறு காணாத மழையைப் பெற்றுள்ளது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீரில் மூழ்கி இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றன.

சென்னைக்கு அருகே இருந்த மிக்ஜாம் புயல், இப்போது நகர்ந்து ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டிணம் இடையே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்று முற்பகல் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 110 கி மீ வரை காற்று வேகமாக வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் சென்னையை கடந்து 190 கிமீ தொலைவில் இப்போது உள்ளதால் சென்னைக்கு மழை குறைந்துள்ளது. பல இடங்களில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் இப்போது மீண்டும் விநியோகிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சூழப்பட்டுள்ள பல பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி நோயாளிகள் என்ற பெயர் வேண்டாம்.. மருத்துவ பயனாளிகள் என அழைக்கவும்: முதல்வர் ஸ்டாலின்

கல்லூரிகளில் இனி 12 மணி நேரம் வகுப்புகள்: பேராசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி..!

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments