எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்.. டிசம்பர் மாதம் மறைந்த அரசியல் தலைவர்கள்..!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (08:01 IST)
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகிய மூன்று பேருமே டிசம்பர் மாதத்தில் காலமாகி உள்ளனர் என்ற அபூர்வ ஒற்றுமை அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் டிசம்பர் 24ஆம் தேதி காலமானார். புரட்சி தலைவி ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். இந்த நிலையில் டிசம்பர் 28ஆம் தேதி புரட்சி கலைஞர் விஜயகாந்த் காலமாகியுள்ளார்.

மூவரும் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பதும் மூவரும் ஆளுமையில் உள்ள தலைவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மூவருமே ஏழை எளிய மக்களுக்காக பாடுபட்டவர்கள் என்றும் குறிப்பாக மூவருமே ஏழை எளிய மக்களின் பசியை ஆற்றியவர்கள் என்பதில் ஒற்றுமை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த எம் ஜி ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூவருமே டிசம்பர் மாதத்தில் மறைந்துள்ள ஒற்றுமையை  பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகைக்கு பிறகு எங்களை பார்த்து ஒட்டுமொத்த நாடே வியக்கும்: செங்கோட்டையன்

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற முடியலையே.. மன வருத்தத்தில் மதுரை இளைஞர் தற்கொலை..!

13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர்.. கருணைக்கொலை செய்ய அனுமதியா? இன்று தீர்ப்பு..!

அதிமுகவை அப்செட் ஆக்கிய விஜய் பேச்சு!.. எடப்பாடி பழனிச்சாமி மூவ் என்ன?....

2,081 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments