Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக ஆட்சியில் குளறுபடி நடந்து வருகிறது - ஓ.பன்னீர் செல்வம்

திமுக ஆட்சியில் குளறுபடி  நடந்து வருகிறது -  ஓ.பன்னீர் செல்வம்
, புதன், 9 பிப்ரவரி 2022 (16:16 IST)
திமுக ஆட்சியில் குளறுபடிகள் நடந்து வருவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகராட்சி தேர்தல்  நடைபெறவுள்ள நிலையில்,  இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிந்துள்ளது. ஏற்கனவே திமுக,  அதிமுக, ம.நீ.ம., நாம் தமிழர், பாஜக  உள்ளிட்ட கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் அனைத்துக் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வம் , துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் திமுக ஆட்சியில் குளறுபடிகள் நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  திமுக கட்சி கடந்தாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்   பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியில் அமைந்தது.  ஆனால்,  8 மாத கால ஆட்சியில் பல்வேறு குளறுபடிகள்  நடந்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே சீருடை சட்டத்துக்கு தடையில்லை: ஹிஜாப் வழக்கில் முக்கிய உத்தரவு