Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதி கனமழை வாய்ப்பு; தமிழகம், புதுச்சேரிக்கு ரெட் அலர்ட்! – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (08:52 IST)
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின. மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது. எனினும் தொடர்ந்து தமிழகத்தில் மழை நீடித்து வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதை தொடர்ந்து இன்று தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதி கனமழை பெய்யும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் நவம்பர் 29 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெள்ளத்தில் மூழ்கிய வங்கி.. ரொக்கம், லாக்கரில் உள்ள நகைகள் என்ன ஆனது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!

அஜித் குமார் கொலை வழக்கு.. தவெக போராட்டம் குறித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இன்று முதல் பொறியியல் கலந்தாய்வு.. மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

இந்திய வீரருக்கு சிலை வைத்து போற்றும் இத்தாலி! - யார் இந்த யஷ்வந்த் காட்கே?

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments