Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி வாரம் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம்! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (08:40 IST)
தமிழகத்தில் இனி வாரம் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க சமீப வாரங்களில், வாரத்திற்கு இருமுறை என தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த வாரத்திற்கு பிறகு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தடுப்பூசி முகாம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதுதவிர மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி மையம் செயல்பட்ட நிலையில் இனி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments