Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஸ்டா மூலம் பழகி திருமணம்.. 5 நாட்களில் மனைவியை வெறுத்த கணவன்.. அதிர்ச்சி தகவல்..!

Siva
செவ்வாய், 4 மார்ச் 2025 (16:18 IST)
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞர், திருமணமான ஐந்து நாட்களில் தனது மனைவியை அம்மா வீட்டில் விட்டுவிட்டு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீதரன், ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவர், இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பிரியா என்பவரிடம் பழகினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
 
இதனால் ஸ்ரீதரன் ராணுவ விடுமுறை எடுத்துக்கொண்டு நண்பர்களின் உதவியுடன் காதலியை திருமணம் செய்துகொண்டார். தேனிலவு முடிந்தபின் மனைவியுடன் வீட்டிற்கு வந்தபோது, குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
குடும்பத்தினர் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், ஸ்ரீதரன் தனது மனைவியை அவரது அம்மா வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இது தொடர்பாக பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் காவல்துறை விசாரணையில் ஸ்ரீதரன் தனது மனைவியுடன் வாழ முடியாது என கூறிவிட்டு மீண்டும் ராணுவத்திற்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணம் செய்த இளம் பெண், ஐந்தே நாட்களில் தனியாய் நின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Siva 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments