Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனாவால் உயிரிழந்தவர்களை எங்களிடத்தில் புதையுங்கள்: பிரதமருக்கு மதுரை மாணவி கடிதம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களை எங்களிடத்தில் புதையுங்கள்: பிரதமருக்கு மதுரை மாணவி கடிதம்
, வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (19:24 IST)
கொரோனாவால் உயிரிழந்தவர்களை எங்களிடத்தில் புதையுங்கள்
கொரோனாவால் உயிரிழந்தவர்களை  அடக்கம் செய்ய பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் எங்களுடைய இடத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்களை அடக்கம் செய்யுங்கள் என்று பிரதமருக்கு மதுரை மாணவி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார் 
 
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி என்ற பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தென்னரசி என்ற மாணவி இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அது அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்நோயிலிருந்து நாட்டுமக்களை காப்பாற்ற தாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டி வருகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் இரவும் பகலும் பாடுபடும் மருத்துவர்கள் மனவேதனையில் உள்ளனர்.
 
எனது தந்தை சிறு குறு விவசாயி. எங்களுக்கு 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் கொரோனா சிகிச்சைக்கு பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், ஊடகத்துறையினர், துப்புரவு பணியாளர்கள் யாராவது நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்தால் அவர்களின் உடலை எங்கள் நிலத்தில் அடக்கம் செய்ய எனது தந்தை, தாயாரின் ஒப்புதலின்பேரில் சம்மதம் தெரிவித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.
 
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உளளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோதிகாவின் சர்ச்சை பேச்சால் அதிரடி ஆக்ஷன் எடுத்த தஞ்சை கலெக்டர்!