Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாதி பெயரை சொல்லி மாணவியை கிண்டல் செய்த பேராசிரியர் கைது: காமராஜர் பல்கலையில் பரபரப்பு..!

சாதி பெயரை சொல்லி மாணவியை கிண்டல் செய்த பேராசிரியர் கைது: காமராஜர் பல்கலையில் பரபரப்பு..!
, சனி, 1 ஏப்ரல் 2023 (13:10 IST)
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியின் ஜாதியை சொல்லி கிண்டல் செய்த பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளனர். 
 
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவியின் ஜாதி பெயரை அந்த பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வரும் சண்முகராஜா என்பவர் சொல்லி கிண்டல் செய்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அந்த மாணவியின் உருவத்தை வைத்தும் அவர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. 
 
இதனை அடுத்து வரலாற்று உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்த சண்முகராஜா என்பவர் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
மாணவியை கிண்டல் செய்ததால் வரலாற்று பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடியில் பிரபல நடிகர்-தயாரிப்பாளருக்கு தொடர்பா?