நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்காதீர்கள்: தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டிப்பு..!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (16:36 IST)
நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. 
 
தற்காலிக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியத்தை தாமதிப்பது, வழங்க மறுப்பது நல்ல செயல் அல்ல என்று கூறிய நீதிபதி, தற்காலிக ஊழியர்கள் அதிகாரிகளிடம் பிச்சை கேட்கவில்லை என்று,ம் செய்த பணிக்கு உரிய ஊதியத்தை மட்டுமே கேட்கின்றனர் என்றும் தெரிவித்தார். 
 
நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப நேரிடும் என்றும், நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்காதீர்கள் என்றும், நீதிமன்றத்திற்கு சக்தி இல்லை எனக்கு கருதாதீர்கள் என்றும் தெரிவித்தார். 
 
நீதிமன்றம் உத்தரவிட்டு 4 ஆண்டுகள் ஆகியும் மதுரை அரசு போக்குவரத்துக் கழக தற்காலிக ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்காதது தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி இந்த கருத்தை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments