Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 நாள்தான் கெடு… டிடிஎஃப் வாசனை ரிலீஸ் செய்யாவிட்டால் – இளைஞர் மிரட்டல்

ttf vasan
, வியாழன், 21 செப்டம்பர் 2023 (19:13 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வாசன் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார்
 

இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது ஜாமீன் மனு இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது

இந்த நிலையில், ''சிறையில் அடைக்கப்பட்ட வாசனை 3 நாள் அல்லது ஒரு வாரத்தில் வெளியே வராவிட்டால் போராட்டம் நடத்துவேன்'' என்று டிடிஎஃப் வாசனின் ரசிகர் இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடநாடு கொலை வழக்கில் பழனிசாமிக்கு எதிராக கருத்து கூற கூடாது: உதயநிதிக்கு இடைக்கால தடை