Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்!; மதுரை கிளை நீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (14:31 IST)
ஆன்லைனில் ரம்மி போன்ற பண மோசடி செய்யும் விளையாட்டுகளை விளையாட மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீண்டகாலமாக லாட்டரி சீட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னால் பணம் வைத்து சீட்டாடுவதும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாடுவது தற்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூட செய்திகள் வெளியாகியது.

சமீபத்தில் திருநெல்வேலியை சேர்ந்த சிலுவை என்பவர் ரம்மி விளையாடியதாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்மீதான விசாரணையின் போது ஆன்லைனில் வரும் ரம்மி போன்ற பண மோசடி விளையாட்டுகளால் இளைஞர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். தெலுங்கானாவில் ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு தடை உள்ளது. அதுபோல ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என நீதிபதி புகழேந்தி கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கிற்காக ரம்மி விளையாடியதாக கூறிய சிலுவையின் விளக்கத்தை ஏற்று வழக்கை ரத்து செய்த நீதிமன்றம், யாராவது பணம் கட்டி ரம்மி விளையாடினால் அவர்கள் மீது வழக்குப்பதியலாம். பொழுதுபோக்கிற்காக விளையாடியவர்கள் மீது வழக்கு தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

கரூரில் 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆயுத பூஜை கொண்டாடிய தவெக.. பிரச்சார பேருந்துக்கு பூஜை..!

நெட்ஃபிளிக்ஸை கேன்சல் செய்யுங்கள்: எலான் மஸ்க் பதிவு செய்த கருத்தால் பரபரப்பு..!

கேரளப் பள்ளிகளில் 1,157 கட்டிடங்கள் ‘பயன்பாட்டிற்கு உகந்ததல்ல’: ஜூம்பா நடனமும் எதிர்ப்பும்

அடுத்த கட்டுரையில்
Show comments