Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க வேண்டும்!; மதுரை கிளை நீதிமன்றம்!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (14:31 IST)
ஆன்லைனில் ரம்மி போன்ற பண மோசடி செய்யும் விளையாட்டுகளை விளையாட மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என மதுரை கிளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீண்டகாலமாக லாட்டரி சீட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னால் பணம் வைத்து சீட்டாடுவதும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாடுவது தற்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூட செய்திகள் வெளியாகியது.

சமீபத்தில் திருநெல்வேலியை சேர்ந்த சிலுவை என்பவர் ரம்மி விளையாடியதாக அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன்மீதான விசாரணையின் போது ஆன்லைனில் வரும் ரம்மி போன்ற பண மோசடி விளையாட்டுகளால் இளைஞர்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர். தெலுங்கானாவில் ஆன்லைன் சீட்டு விளையாட்டுக்கு தடை உள்ளது. அதுபோல ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என நீதிபதி புகழேந்தி கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கிற்காக ரம்மி விளையாடியதாக கூறிய சிலுவையின் விளக்கத்தை ஏற்று வழக்கை ரத்து செய்த நீதிமன்றம், யாராவது பணம் கட்டி ரம்மி விளையாடினால் அவர்கள் மீது வழக்குப்பதியலாம். பொழுதுபோக்கிற்காக விளையாடியவர்கள் மீது வழக்கு தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments