Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி சொத்து வரி முறைகேடு: பில் கலெக்டர், உதவியாளர் கைது

Mahendran
திங்கள், 1 செப்டம்பர் 2025 (10:00 IST)
மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்து வரி வசூலில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், பில் கலெக்டர் ஒருவரும் அவரது உதவியாளரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான கட்டிடங்களின் சொத்து வரியை மறு ஆய்வு செய்ய, ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு குழு என மொத்தம் நூறு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக, முன்னதாக உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த மறு ஆய்வின் போதுதான் ரூ.200 கோடி அளவிலான சொத்து வரி முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. வரி வசூலில் ஈடுபட்டிருந்த பில் கலெக்டரும், அவரது உதவியாளரும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 
 
இதனையடுத்து, இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை, மேலும் பல முறைகேடுகளை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகத்தில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. வாகன ஓட்டிகள் அதிருப்தி..!

செப்டம்பரில் கனமழை பெய்யும்: நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

என்ன நடக்குது இங்க.. ஒரு பொண்ணுன்னு கூட பாக்காம.. திமுக கவுன்சிலரின் கணவருக்கு நடிகை அம்பிகா கண்டனம்..!

வழக்கம்போல் வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறையவில்லை.. பொதுமக்கள் அதிருப்தி..!

அமித்ஷா தாக்கல் செய்த மசோதா எதிரொலி: 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments