போராட்டம் செய்யும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு! பெரும் பரபரப்பு..!

Mahendran
புதன், 13 ஆகஸ்ட் 2025 (12:04 IST)
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தலைமை நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவில், "அனுமதிக்கப்படாத இடங்களில் போராட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. போராட்டங்களை நடத்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் போராட்டத்தை நடத்திக் கொள்ளலாம்" என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
இதையடுத்து, மாநகர காவல் துறை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போராட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போராட்டத்திற்கு திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்யும் வரை இறுதி சடங்கு செய்ய மாட்டோம்: தற்கொலை செய்த அதிகாரியின் மனைவி.!

பிகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: திடீரென பின்வாங்கிய பிரசாந்த் கிஷோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments