Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Advertiesment
சவுக்கு சங்கர்

Mahendran

, செவ்வாய், 29 ஜூலை 2025 (15:47 IST)
சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள 13 வழக்குகளின் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சவுக்கு சங்கரின் அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சவுக்கு சங்கருக்கு எதிராக 13 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், மேலும் 24 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, நிலுவையில் உள்ள 13 வழக்குகளை நான்கு மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
 
இந்த உத்தரவின் மூலம், வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாகவே சவுக்கு சங்கர் மீதான அனைத்து வழக்குகளின் விசாரணையும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!