Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு முதல் அதிகாலை வரை மழை.. குளிர்ந்தது சென்னை..!

Siva
வியாழன், 7 நவம்பர் 2024 (07:29 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மிதமான மழை பெய்து கொண்டிருப்பதை அடுத்து குளிர்ந்த தட்பவெப்ப நிலையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது மற்றும் வங்கக் கடலில் தோன்றிய வளிமண்டல சுழற்சி ஆகியவை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்த வகையில், நேற்று இரவு திடீரென சென்னையில் மழை பெய்யத் தொடங்கிய நிலையில் விடிய விடிய மிதமான மழை பெய்ததாகவும், இன்று அதிகாலை முதல் தற்போது வரை லேசான மழை பெய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை வடபழனி, கோடம்பாக்கம், சேப்பாக்கம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, தியாகராய நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் சென்னையின் தட்பவெப்ப நிலை குளிர்ச்சியாக மாறியதை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இந்த மழை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே..! பறக்கும் ரயில் பாதையில் இனி மெட்ரோ ரயில் சேவை! - எப்போது தெரியுமா?

இந்தியில் பேச முடியாது.. மும்பை செய்தியாளர் சந்திப்பில் நடிகை கஜோல் ஆவேசம்..!

அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமன வழக்கு தள்ளுபடி.. பாஜக பிரமுகருக்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

திருமலையில் கட்டவிருந்த மும்தாஜ் ஹோட்டல் இடமாற்றம்.. ஆந்திர அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியாவை வெறுப்பேற்ற பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருங்கிய உறவு.. அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments