Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு முதல் அதிகாலை வரை மழை.. குளிர்ந்தது சென்னை..!

Siva
வியாழன், 7 நவம்பர் 2024 (07:29 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மிதமான மழை பெய்து கொண்டிருப்பதை அடுத்து குளிர்ந்த தட்பவெப்ப நிலையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது மற்றும் வங்கக் கடலில் தோன்றிய வளிமண்டல சுழற்சி ஆகியவை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்த வகையில், நேற்று இரவு திடீரென சென்னையில் மழை பெய்யத் தொடங்கிய நிலையில் விடிய விடிய மிதமான மழை பெய்ததாகவும், இன்று அதிகாலை முதல் தற்போது வரை லேசான மழை பெய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை வடபழனி, கோடம்பாக்கம், சேப்பாக்கம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, தியாகராய நகர், பாண்டி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் சென்னையின் தட்பவெப்ப நிலை குளிர்ச்சியாக மாறியதை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இந்த மழை இன்னும் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments