Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடைத்தேர்தல் வேட்புமனு வாபஸ் – இன்றே கடைசி !

இடைத்தேர்தல் வேட்புமனு வாபஸ் – இன்றே கடைசி !
, வியாழன், 2 மே 2019 (11:37 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஏற்கனவே நடந்த 18 தொகுதி இடைத்தேர்தல்களோடு சேர்த்து மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் இந்த தேர்தல் அதிமுகவுக்கு வாழ்வா சாவா எனும் நிலைமையில் உள்ளது.

இந்த இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதால் திமுக மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகள் தீயாய் வேலைப்பார்த்து வருகின்றனர். வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 29 ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் வேட்புமனுப்  பரிசீலனை நேற்றோடு முடிவடைந்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெற இன்றேக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரை தேடி ரோட்டுக்கு வந்த அனகோண்டா: மக்களே உஷார்!!