Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடிப் பேச்சில் விதிமீறல் இல்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

மோடிப் பேச்சில் விதிமீறல் இல்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு !
, புதன், 1 மே 2019 (11:49 IST)
ராகுல்காந்தி  போட்டியிடும் வயநாடு தொகுதி குறித்து மோடி பேசியதில் விதிமீறல் எதுவும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வார்தா நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்
டியிடுவது குறித்து சர்ச்சைக்குரியக் கருத்துகளைப் பேசினார். அப்போது ‘காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு துரோகம் செய்துள்ளது. அதனால் இந்து மக்கள் காங்கிரஸூக்குப் பாடம் புகட்ட தயாராகி விட்டது. அதனால் காங்கிரஸ் தலைவர்கள் இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதிகளில் நிற்கின்றனர்.’ என ராகுல் காந்தியை மறைமுகமாக குற்றம்சாட்டினர்.

இதை அடுத்து காங்கிரஸ் சார்பில் மோடி மதத்தை வைத்து பிரச்சாரம் செய்ததாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இதை விசாரித்த தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில் ‘ காங்கிரஸ் அனுப்பிய அறிக்கைகளை வைத்து ஆராய்ந்ததில் மோடியின் பேச்சில் எந்த அரசியல் விதிமுறைகளையும் மீறவில்லை எனத் தெரிகிறது’ எனத் தெரிவித்துள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்திலேயே தேர்வு மையம் – மே 5 ஆம் தேதி நீட் தேர்வு !