Publish Date: Thu, 17 Jun 2021 (16:50 IST)
Updated Date: Thu, 17 Jun 2021 (16:53 IST)
தமிழகத்தில்,10 மற்றும் 12, ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் லேப் டாப் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், இன்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விரையில் தமிழகத்திலுள்ள 10, 12 ஆம், வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.