Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கணி தீவிபத்து: பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (09:58 IST)
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் டிரெக்கிங் மற்றும் சுற்றுலா சென்ற 36 பே சிக்கி கொண்டனர். அதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகிய நிலையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒவ்வொருவராக மரணம் அடைந்ததால் நேற்று வரை பலி எண்ணிக்கை 21ஆக இருந்தது

இந்த நிலையில் குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக இன்று உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உடுமலைப்பேட்டையை சேர்ந்த 26 வயது சிவசங்கரி என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

இந்த விபத்தில் காயம் அடைந்த இன்னும் ஒருசிலர் சிகிச்சை பெற்று வந்தபோதிலும் அவர்கள் குணமடைந்து வருவதாகவும், மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments