Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடி வைத்த அமமுக.. சட்டசபையில் அடி வைக்குமா? – குழப்பத்தில் கோவில்பட்டி நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (11:53 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் கோவில்பட்டி தொகுதியில் அமமுக – அதிமுக இடையே இழுபறி நீடிக்கிறது.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் கோவில்பட்டி தொகுதியில் அமமுக – அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதிமுக சார்பில் அத்தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிட்ட நிலையில், அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். தேர்தல் பரப்புரையின்போது அமமுகவினர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கார் அருகே பட்டாசு வெடித்தது இரு கட்சியினர் இடையே மோதலை கிளப்பியிருந்தது.

இந்நிலையில் தற்போது கோவில்பட்டி வாக்கு எண்ணிக்கையில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அமமுக – அதிமுக இடையே இழுபறி நீடித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments