Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைநகரை பக்கா டார்கெட் செய்யும் திமுக! – சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (11:40 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உட்பட சுயெட்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தமாக 3,998 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட 16 தொகுதிகளில் 15 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களே முன்னிலையில் உள்ளனர். இதனால் தொடர்ந்து முன்னிலை வெற்றி வாய்ப்பாக மாறினால் சென்னை தலைநகர் முழுவதும் திமுக கையில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments