Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

Mahendran
திங்கள், 19 மே 2025 (12:49 IST)
சென்னை கிளாம்பாக்கத்தில் உருவாகி வரும் புதிய புறநகர் ரயில் நிலையம், வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
தற்போதுள்ள நிலவரப்படி, நடைமேடை பணிகள் 80% முடிந்துள்ளன. பயணிகள் நிழற்குடை, கழிவறை, முகப்பு கட்டடம் போன்ற வசதிகளுக்கான கட்டுமானமும் விரைவில் நிறைவேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் வெளிமாநில மற்றும் மாவட்ட பேருந்துகள் இயக்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. இதற்கான மாற்று வழியாக, கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
 
இந்த புதிய பேருந்து நிலையத்துடன் இணைந்து, அருகில் ஒரு புறநகர் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் வைத்தது. அதன்படி, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை ரயில் பாதையில், வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே ஒரு புதிய நிலையம் கட்டப்படும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
 
12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் தங்கக்கூடிய வகையில் 3 நடைமேடைகள் கொண்ட இந்த நிலையம், இயங்கத் தக்க கட்டமைப்புடன் தயாராகி வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments