Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலை சம்பவத்தில் மவுனம் ஏன்: தி.மு.க., எம்.பி., கனிமொழி எங்கே? குஷ்பு கேள்வி

Siva
வியாழன், 2 ஜனவரி 2025 (14:10 IST)
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் மௌனமாக இருக்கும் திமுக எம்பி கனிமொழி எங்கே? என பாஜகவின் குஷ்பு கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பாலியல் வன்கொடுமையை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் எந்த மாநிலத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் அது பாதிப்பு தான் என்றும், பெண்கள் பாதிக்கப்பட்டால் கட்சி ரீதியாக சாயம் பூச வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியிட்டவர்களுக்கு தான் தண்டனையை வாங்கி தர வேண்டும் என்றும், நான் மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தபோது தமிழகத்தில் இருந்து தான் அதிகமான புகார்கள் பெண்களுக்கு எதிராக வந்தது என்றும் அவர் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் திமுகவிலிருந்து யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும், குறிப்பாக கனிமொழி எங்கே? அவரது மகளிர் அணி எங்கே போனது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுக சார்பில் ஒரு பெண் அமைச்சர், எம்பி அல்லது எம்எல்ஏ கூட ஏன் குரல் கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

தேசிய மகளிர் ஆணையம் விசாரணைக்கு தமிழகம் வந்த போது, தமிழக மகளிர் ஆணையத்தின் சார்பில் யாரும் உடன் செல்லாதது ஏன்? என்றும் குஷ்பு கேள்வி எழுப்பினார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்