Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஷ்பூ கைது! ஆடுகளோடு அடைக்கப்பட்ட பாஜகவினர்! - மதுரையில் பரபரப்பு!

Prasanth Karthick
வெள்ளி, 3 ஜனவரி 2025 (14:53 IST)

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்காக பேரணி நடத்திய பாஜக மகளிரணியை சேர்ந்தவர்களை கைது செய்து ஆட்டுக் கொட்டகைக்கு அருகில் அடைத்து வைத்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, இன்று மதுரையில் பாஜக மகளிரணி சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. நீதிக்கேட்டு மதுரையை எரித்த கண்ணகியை நினைவுப்படுத்தும் விதமாக மகளிரணியினர் கையில் சிலம்பை ஏந்தி பேரணியில் சென்றனர். 
 

ALSO READ: சென்னை தீவுத்திடலில் அரசு பொருட்காட்சி: தொடங்கும் தேதி அறிவிப்பு..!

 

இந்நிலையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதற்காக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ உள்ளிட்ட பாஜக மகளிரணியினரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு வியாபாரத்திற்காக அருகிலேயே 200க்கும் மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைத்துள்ளனர்.

 

ஆடுகளின் துர்நாற்றம் வீசுவதாகவும், தங்களை வேண்டுமென்றே இப்பகுதியில் அடைத்து வைத்துள்ளதாகவும் பாஜக மகளிர் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்