Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனமழை எதிரொலி: பள்ளிகள் இன்று விடுமுறை!

கனமழை எதிரொலி: பள்ளிகள் இன்று விடுமுறை!
, வெள்ளி, 1 அக்டோபர் 2021 (09:02 IST)
நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து இதையடுத்து வெள்ளக்காடாக இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கனமழை காரணமாக கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் 
 
கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வந்ததை அடுத்து அம்மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கி உள்ளது மேலும் வெள்ளம் காரணமாக வாகன போக்குவரத்தும் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகிறது 
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் இன்று மீண்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
இதனை அடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் தொடங்குகிறது அரசி ஏ.சி பேருந்து சேவை! – முகக்கவசம் கட்டாயம்!