Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

17 மாவட்டங்களில் கனமழை: இந்த மாவட்ட மக்களே உஷார்!!

Advertiesment
17 மாவட்டங்களில் கனமழை: இந்த மாவட்ட மக்களே உஷார்!!
, வியாழன், 30 செப்டம்பர் 2021 (15:49 IST)
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாமக்கல், தருமபுரி, சேலம், கடலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடு தேடி பள்ளிகள்: தமிழக அரசு புது திட்டம் சென்னையில் துவக்கம்!