Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடு தேடி பள்ளிகள்: தமிழக அரசு புது திட்டம் சென்னையில் துவக்கம்!

வீடு தேடி பள்ளிகள்: தமிழக அரசு புது திட்டம் சென்னையில் துவக்கம்!
, வியாழன், 30 செப்டம்பர் 2021 (15:41 IST)
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் எடுக்க ’வீடு தேடி பள்ளிகள்’ திட்டம் அறிமுகம். 

 
1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது ’வீடு தேடி பள்ளிகள்’ என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. 
 
ஆம், இந்த திட்டத்தின் கீழ்  எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் எடுப்பார்கள். விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் இந்த திட்டத்தை சென்னையில் இருந்து துவங்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
 
இது மட்டுமின்றி வீதி வகுப்பறை என்ற பெயரில்  தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் வேறு திட்டத்தை செயல்படுத்தவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுத்தையை அடித்து விரட்டிய மூதாட்டி