Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 லட்சம் சம்பளத்தை வைத்துகொண்டு நாக்கையா வழிப்பது? கருணாஸ் ஆவேசம்!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (14:20 IST)
நகைச்சுவை நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், தனது தொகுதி மக்களுக்கு எந்த ஒரு சலுகைகளையும் செய்திடாமல் எம்.எல்.ஏ.வாக இருப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். 
 
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பின்வருமாறு பேசினார். என் தொகுதி மக்களுக்காகவும் எந்த ஒரு சலுகையும் செய்திடாத அரசில் எம்.எல்.ஏ.வாக பதவியை தொடர நான் விரும்பவில்லை. நான் எம்.எல்.ஏ.வாக ஆனது அனைத்து பிரிவிலும் கமிஷன் பெற்று அரசுக்கு கொடுப்பதற்காக அல்ல. ஊதியத்துக்காக நான் எம்.எல்.ஏ.வாகவில்லை. 
 
இதுவரை சபாநாயகரிடம் இருந்து இதுவரை எந்த ஒரு கடிதமும் வரவில்லை. அப்படி வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். என் சமுதாயத்திற்காக எப்போது வேண்டுமானாலும் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன். 
 
தற்போதைய தமிழக அரசு, மக்களுக்கான அரசாக இல்லை. சுயநலமான அரசாகவும், தங்களது உறவினர்களுக்கு சலுகை செய்யும் அரசாக உள்ளது. தமிழக அரசிடமிருந்து எனக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. எம்.எல்.ஏ.வுக்கு அரசு வழங்கும் ரூ.1 லட்சம்  சம்பளத்தை வைத்து கொண்டு நாக்கையா வழிப்பது? என ஆவேசமாக பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments