Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுகவிற்கு பயம் வந்துவிட்டது: அழைப்பு குறித்து தங்க தமிழ்செல்வன்!

அதிமுகவிற்கு பயம் வந்துவிட்டது: அழைப்பு குறித்து தங்க தமிழ்செல்வன்!
, சனி, 27 அக்டோபர் 2018 (18:59 IST)
18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் பதவி தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பில் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் பதவி இழந்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் வரும் 30 ஆம் தேதி மேல்முறையீடு செய்யவுள்ளனர். 
 
விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, அதிமுகவிலிருந்து பிரிந்து தினகரன் பக்கம் சென்ற எம்.எல்.ஏக்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
 
இது குறித்து தினகரன் அதரவாளர் தங்க தமிழ்செல்வனிடம் கேட்ட போது, இந்த அழைப்பு கேலி கூத்தானது. இந்த அழைப்பின் மூலம் அதிமுகவோடு இணைய வாய்ப்பே இல்லை. அப்படியே அதிமுகவில் இணைய வேண்டும் என்றாலும், அங்கு உள்ள சில தலைகள் வெளியேறிய பின்னர்தான் இணைப்பு நடக்கும். 
 
அதிமுகவின் 90% ஆதரவாளர்கள் எங்களோடுதான் உள்ளனர். எனவே, அங்கு மீதமுள்ளவர்கள் வேண்டுமானால் எங்களோடு வந்து இணையட்டும். அவர்களுக்கு பயம் வந்துவிட்டது அதனால்தான் இந்த இணைப்புக்கான அழைப்பு எல்லாம் என தெரிவித்தார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழங்கால அம்மன் சிலை மீட்பு - கரூரில் பரபரப்பு (வீடியோ)