Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது மேடையில் தூங்கிய காங்கிரஸ் வேட்பாளர்

Webdunia
புதன், 10 ஏப்ரல் 2019 (08:15 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் அவர் அதிகாலை முதல் இரவு வரை ஓய்வின்றி பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
இந்த நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனனை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து நேற்று தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசி கொண்டிருந்தார். அப்போது மேடையில் உட்கார்ந்திருந்த வேட்பாளர் வசந்தகுமார் ஒரு கட்டத்தில் தூங்கிவிட்டார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவருக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர் அவரை எழுப்பிவிட்டார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 
ஏற்கனவே பல கருத்துக்கணிப்புகள் கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் பொன்ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போதே தூங்கிய வசந்தகுமாரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்து டிக்கெட் Payement Fail ஆனால் அரை மணி நேரத்தில் பணம் ரிட்டர்ன்! - போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு!

நான் மோசடி செய்துட்டு ஓடினேனா? என்ன நடந்தது தெரியுமா? - முதல்முறையாக மனம் திறந்த மல்லைய்யா!

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments