Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிகிச்சை அளிக்காமல் கருணாநிதியை அனுப்பிவிட்டார் ஸ்டாலின்: பகீர் கிளப்பும் எடப்பாடியார்!!!

சிகிச்சை அளிக்காமல் கருணாநிதியை அனுப்பிவிட்டார் ஸ்டாலின்:  பகீர் கிளப்பும் எடப்பாடியார்!!!
, திங்கள், 8 ஏப்ரல் 2019 (15:11 IST)
வரும் நாடாளுமன்றம் இடைத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இந்தப் பிரசாரத்தில் முக்கிய தலைவர்கள் முதல்  வேட்பாளர்கள் அனைவரும் தீடீர் தீடீரென்று  மக்களுக்கு எதையாவதும் கூறுவது  வாடிக்கையாகி வருகிறது.
அதிமுக , திமுக இருகட்சிகளும் தமிழகத்தில் எதிரும் புதிருமாக உள்ளது. இந்நிலையில் அரசியல் களத்தில்  அதுவும் தேர்தல் சமயத்தில் இவர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாடுகள் எல்லொரும் அறிவர்.சமீபத்தில் கொள்கைகளை விமர்சிப்பது விடுத்து தனி நபர்களையும், மறைந்த தலைவர்களையும்  விமர்சித்து வருவது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
 
இந்நிலையில் திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்து ஒட்டன் சத்திரம் பகுதியில் வாக்குச் சேகரித்தார் முதல்வர்.
 
அப்போது அவர் பேசியதாவது:
 
திமுக தலைவர் ஸ்டாலின் கூலிப்படை தலைவர் போன்று செயல்படுவதாகவும் , அவர்களின் தொண்டர்களும் அவ்வாறே இருப்பதாகவும் குற்றச்சாட்டினார். 
 
தந்தையின் ஆதரவில் கொள்ளை புறம் வழியாக ஸ்டாலின் அரசியலுக்கு வந்ததாக கடுமையாக சிமர்சித்தார். மேலும் மரியாதை கொடுத்துப் பேசினால் மரியாதை கிடைக்கும் என்றும் தான் திருப்பி பேசினால்  ஸ்டாலினின் காது சவ்வு கிழிந்துவிடும் என்று கூறினார்.
 
இதற்கு முன்னதாக ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல விசவாயு என்று தெரிவித்து குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது :
 
திமுக தலைவராக கலைஞர் கருணாநிதி இருந்த போது 2 ஆண்டுகளாக வீட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்தார் எனவும், கலைஞருக்கு சிகிச்சை அளிக்காமல் அனுப்பிவிட்டார் எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
 
மேலும், கலைஞருக்கு ஏற்பட்ட நிலைகுறித்து தமிழக அரசு தகுந்த விசாரணை நடத்தும் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுமி கொலை வழக்கு : தூக்கு தண்டனையில் இருந்து தஸ்வந்த் ’எஸ்கேப்’?