Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இடிந்தகரையில் கன்னியாகுமரி மீனவர்கள் சிறைப்பிடிப்பு!

இடிந்தகரையில் கன்னியாகுமரி மீனவர்கள் சிறைப்பிடிப்பு!
, செவ்வாய், 15 மார்ச் 2022 (10:26 IST)
கன்னியாகுமரியை சேர்ந்த 39 மீனவர்களை இடிந்தகரை மீனவர்கள் சிறை பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழகத்தின் நாகப்பட்டிணம், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் பின்னர் விடுவிப்பதும் வழக்கமாக உள்ளது.
 
ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக கன்னியாகுமரியை சேர்ந்த 39 மீனவர்களை இடிந்தகரை மீனவர்கள் சிறை பிடித்துள்ளனர். ஆம், தூண்டில் போட்டு மீன் பிடிப்பதால் வலைகள் அறுந்து விடுவதாக கூறி ஏழு படகுகளுடன் 39  பேர் சிறைபிடிக்கப்பட்டனர். 
 
பொதுவாக அண்டை நாடுகளில் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட வந்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான நுழைவு தேர்வு தேதி அறிவிப்பு!