Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் மீனவர்கள் கைது.. ஆனால் இந்த முறை இந்தோனேசிய கடற்படை!

மீண்டும் மீனவர்கள் கைது.. ஆனால் இந்த முறை இந்தோனேசிய கடற்படை!
, புதன், 9 மார்ச் 2022 (10:44 IST)
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்கதையாகியுள்ள நிலையில் தற்போது இந்தோனேசிய கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது.

தமிழகத்தின் நாகப்பட்டிணம், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் பின்னர் விடுவிப்பதும் வழக்கமாக உள்ளது,

இந்நிலையில் நேற்று குமரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்தமான் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்குவந்த இந்தோனேசிய கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் பிடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழுதுபார்க்கும்போது திடீரென வெடித்த ஐபோன்: பரபரப்பு தகவல்!