Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சிக்கு மேலும் ஒரு பெருமை.. பெண் நெசவாளருக்கு தேசிய விருது

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (09:31 IST)
காஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், மத்திய கைத்தறி மற்றும் துணிநூல் துறை, தேசிய அளவில் சிறந்த நெசவாளர்களுக்கு தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அளவில் சிறந்த கைத்தறி விருதுக்கு தேர்வான, 11 பேரில் தமிழகம் காஞ்சிபுரத்தை சேர்ந்த கீதா என்ற பெண் நெசவாளியும் இடம்பெற்றுள்ளார்.

கோர்வை ரக பட்டு சேலை நெசவுக்காக கீதாவுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது, அதிகமான மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கோர்வை ரக பட்டு சேலை காஞ்சிபுரத்தில் மிகவும் அரிதாகவே கிடைக்கும். இந்த சேலை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்புடையது என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments