இந்து விரோதி என்று என்னிடம் கூறி விளையாட்டு காட்ட வேண்டாம்: கமல்ஹாசன்

Webdunia
வியாழன், 16 மே 2019 (08:01 IST)
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது இந்து ஆதரவு அமைப்பின் நிர்வாகி ஒருவர் கமல்ஹாசனை நோக்கி காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரையும் அவருடன் இருந்த நபர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது அவர்கள் 'கமல்ஹாசன் ஒரு இந்து விரோதி என்றும் பாரத மாதாஜிக்கு ஜே' என்றும் முழக்கமிட்டபடி சென்றனர்.
 
இந்த களேபரத்திற்கு பின்னரும் கமல்ஹாசன் தங்குதடையின்றி பொதுக்கூட்ட மேடையில் பேசினார். அப்போது அவர், 'என்னை அந்த விரோதி, இந்த விரோதி, இந்து விரோதி என்று கூறி விளையாட்டு காட்ட வேண்டாம். நான் யாருக்கு எதிரி என்பது மக்களுக்கு தெரியும். அதுவும் நானாக வளர்த்து கொண்ட விரோதம் கிடையாது. உங்களுடைய நேர்மையின்மைதான் என்னை உங்களுடைய விரோதியாக மாற்றியது
 
இன்று நடந்த நிகழ்வுகள் வெற்றி அடைந்த மாணவர்களை பார்த்து தோல்வி அடைந்தவர்கள் ஏளனமாக பேசியது போல் இருப்பதாகவும், ஒரு வருடத்தில் கட்சி வளர்ந்துவிட்டதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் கமல்ஹாசன் மேலும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல்: அழிவை ஒப்புக்கொண்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது..!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி: 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

சென்னைக்கு மழை தயாராகிவிட்டது.. மழையை எதிர்கொள்ள சென்னை தயாரா? தமிழ்நாடு வெதர்மேன்

சிங்கப்பூரில் சாகச விளையாட்டின்போது விபரீதம்.. பிரபல பாடகர் பரிதாப மரணம்..!

மரம் ஏற வேண்டாம், என்னை பின் தொடர வேண்டாம்.. தவெக தொண்டர்களுக்கு அறிவுரைகள் கூறிய விஜய்..

அடுத்த கட்டுரையில்
Show comments