Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து விரோதி என்று என்னிடம் கூறி விளையாட்டு காட்ட வேண்டாம்: கமல்ஹாசன்

Webdunia
வியாழன், 16 மே 2019 (08:01 IST)
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது இந்து ஆதரவு அமைப்பின் நிர்வாகி ஒருவர் கமல்ஹாசனை நோக்கி காலணியை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நபரையும் அவருடன் இருந்த நபர்களையும் போலீசார் அப்புறப்படுத்தினர். அப்போது அவர்கள் 'கமல்ஹாசன் ஒரு இந்து விரோதி என்றும் பாரத மாதாஜிக்கு ஜே' என்றும் முழக்கமிட்டபடி சென்றனர்.
 
இந்த களேபரத்திற்கு பின்னரும் கமல்ஹாசன் தங்குதடையின்றி பொதுக்கூட்ட மேடையில் பேசினார். அப்போது அவர், 'என்னை அந்த விரோதி, இந்த விரோதி, இந்து விரோதி என்று கூறி விளையாட்டு காட்ட வேண்டாம். நான் யாருக்கு எதிரி என்பது மக்களுக்கு தெரியும். அதுவும் நானாக வளர்த்து கொண்ட விரோதம் கிடையாது. உங்களுடைய நேர்மையின்மைதான் என்னை உங்களுடைய விரோதியாக மாற்றியது
 
இன்று நடந்த நிகழ்வுகள் வெற்றி அடைந்த மாணவர்களை பார்த்து தோல்வி அடைந்தவர்கள் ஏளனமாக பேசியது போல் இருப்பதாகவும், ஒரு வருடத்தில் கட்சி வளர்ந்துவிட்டதால் ஏற்பட்ட பொறாமை காரணமாக அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாகவும் கமல்ஹாசன் மேலும் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments