Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்ணை முடி சும்மா இருக்க முடியாது: 2 அமைச்சர்களின் வழக்கு குறித்து நீதிபதி ஆவேச கருத்து..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:08 IST)
அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகிய இருவரது வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்துள்ளதை அடுத்து இந்த வழக்கு தற்போது விசாரணை நடைபெற்றது. 
 
இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர்  ராமச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 25ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
இந்த வழக்கு குறித்து அவர் மேலும் கூறிய போது இந்த வழக்கின் தீர்ப்பை படித்து நான் மூன்று நாட்களாக தூங்கவில்லை, இரண்டு அமைச்சர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை  நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 
 
நீதிமன்றம் கட்சிக்கு, அரசுக்கு உரித்தானது அல்ல, குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரித்தானது. அமைச்சர்கள் இருவரையும் விடுவித்து உத்தரவுகளும் ஒரே மாதிரியாக உள்ளன. 
 
லஞ்ச ஒழிப்புத்துறை 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு நிலைப்பாட்டில் இருந்து மாறியதை காண முடிகிறது. இதன் பிறகும் நான் கண்ணை மூடிக்கொண்டு இருந்தால் கடமையை செய்ய தவறியன் ஆகிவிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி சுவடு மறைவதற்குள் மற்றுமொரு கள்ளச்சாராய மரணம்! திமுகவுக்கு எடப்பாடி கண்டனம்.!!

செந்தில் பாலாஜியின் புதிய மனுக்களின் விசாரணை எப்போது? நீதிமன்றம் அறிவிப்பு..!

சீன அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு..! எல்லை பிரச்சினை குறித்து முக்கிய ஆலோசனை..!!

உ.பி. கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு சமூகவிரோதிகளே காரணம்: தலைமறைவான போலே பாபா அறிக்கை

அதிமுக பிரமுகர் கொலை வழக்கு.! திமுக பிரமுகர் உள்பட 8 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments